×

கீழ்வேளூர் அருகே பரபரப்பு ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச்1: மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர்கள் சிம்சன், காபிரியேல், சீனி மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சிஐடியு மாவட்ட செயலாளர் ரவீந்திரன், இயற்கை விவசாயி ராமலிங்கம், ஆகியோர் கண்டன உரையாற்றினர், விவசாய விளை பொருட்கள், உணவுப் பொருட்கள், உரம், கேஸ் ஆகியவற்றிற்கான மானியத்தை குறைத்ததை கண்டித்தும், சிறு, குறு நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி விட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தும், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு 25 ஆயிரம் கோடி நிதியை குறைத்ததை கண்டிப்பது, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டிப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Tags : Kizhvelur ,Union Budget ,
× RELATED நாடாளுமன்ற கேன்டீனில் எம்பி.க்களுடன் மதிய உணவு சாப்பிட்ட பிரதமர் மோடி