×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோயில் பூட்டை உடைத்து கொள்ளை

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.26:பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேவராஜபாளையம் கிராமத்தில் புதூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடந்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை பூஜை முடித்து சென்ற பூசாரி, ேநற்று வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த தங்க தாலியை காணவில்லை. இது குறித்து கோயில் பூசாரி வேடியப்பன் கொடுத்த புகாரின் பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Papirettipatti ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை