×

சிஐஐ கோவை கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை, பிப். 25:  இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) கோவை கிளையின் வருடாந்திர மண்டல கூட்டம் கோவையில் நடந்தது. சிஐஐ கோவை கிளை முன்னாள் துணை தலைவர் அர்ஜுன் பிரகாஷ் 2021-22ம் ஆண்டிற்கான செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். 2021-22ம் ஆண்டிற்கான \”கோவை நெக்ஸ்ட்\” என்ற தலைப்பில் சிஐஐ மேற்கொண்ட புதிய ஆய்வையும் அர்ஜுன் எடுத்துரைத்தார். தொழில் கொள்கை, உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பலவற்றில் சிஐஐ எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து  சிஐஐ தமிழக தலைவர் டாக்டர் சந்திரகுமார் பேசினார்.

மேலும், மாநில அளவிலான பல முயற்சிகளில் கோவை மண்டலம் முன்னணியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து., 2022-23ம் ஆண்டிற்கான சிஐஐ கோவை மண்டல கிளை தலைவராக பிரசாந்த் சுப்பிரமணியன், துணை தலைவராக செந்தில் கணேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : CII Coimbatore Branch ,
× RELATED சிஐஐ கோவை கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு