×

எஸ்.கைலாசபுரத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்

ஓட்டப்பிடாரம், பிப். 25: ஓட்டப்பிடாரம் யூனியன் சபரிமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எஸ்.கைலாசபுரத்தில், தமிழக அரசின்  மக்களைத் தேடி மருத்துவம் திட்ட துவக்க விழா நடந்தது. யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார். இத்திட்டத்தின் கீழ் கைலாசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வீடுகளிலிருந்து வெளியே செல்ல இல்லாமலும் அதனால் அதற்குறிய சிகிச்சைகளை பெற முடியாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று அரசு மருத்துவர் ஜீவராஜ் பாண்டியன் தலைமையிலான  மருத்துவக் குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கி மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் எஸ்.கைலாசபுரம், கொடியங்குளம் பஞ். தலைவர்கள் ஜெயந்தி, அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : S. Kailasapuram ,
× RELATED முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும்...