வேதாரண்யம், பிப்.24: வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பைரவர் கோவில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரிலும் மட்டுமே பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் 16-வது அவதாரமாக பைரவர் விளங்குகிறார். இத்தகைய சிறப்பு மிக்க பைரவர் கோவிலில் மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கமாகும். நேற்று மாசி மாத தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திருநீரு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.