×

கொரடாச்சேரி அருகே மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் பரிதாப பலி

திருவாரூர், பிப்.22: திருவாரூர் அடுத்த கொரடாச்சேரி அருகே மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் இறந்தன. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே தேவர்கண்டநல்லூர் நாங்கரை கிராமத்தில் வசித்து வருபவர்கள் கலையரசன், சுதா மற்றும் ராஜாத்தி. இவர்களது தலா ஒரு பசுமாடு வீதம் 3 மாடுகள் அந்த பகுதியில் இருந்துவரும் நாகூரான் என்பவரது வயலில் நேற்று முன்தினம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி ஒன்றில் 3 பசு மாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக உரசியதன் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்தன. இறந்த 3 பசு மாடுகளின் மதிப்பு ரூ.90 ஆயிரம் என கூறப்படும் நிலையில் இது தொடர்பாக கலையரசன் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Koradacheri ,
× RELATED தமிழ்நாட்டுக்கு எதையும் தராத...