×

பந்தலூரில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம்

பந்தலூர், பிப்.18: பந்தலூர் பஜாரில் நெல்லியாளம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டன.
திமுக நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி முன்னிலை வகித்தார் மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், காங்கிரஸ் கட்சி நெல்லியாளம் நகர தலைவர் கோபிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நௌபல் மற்றும் வேட்பாளர்கள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட உதயசூரியன் சின்னத்திலும், கூட்டணி கட்சிகளுக்கு அவர்களுக்குரிய சின்னத்திலும் வாக்களித்து வெற்றி செய்ய வேண்டும்  என  வாக்காளர்களிடம் வலியுறுத்தினர்.

Tags : Pandharpur ,
× RELATED பந்தலூர் அருகே விவசாய நிலங்களை...