×

மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் காலமானார்

திருச்செங்கோடு, பிப். 15: திருச்செங்கோடு அடுத்த மண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் டி.என்.குருசாமி. இவர் மதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளராகவும், மாநில உயர்நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். கொங்கு வேளாளர் சங்க கட்டிட கமிட்டி தலைவரகவும், லாரி சங்க செயலாளர், திருச்செங்கோடு பைனான்சியர்ஸ் அசோசியேசன் பொருளாளர், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர், மாணிக்கம்பாளையம் அரசு மேநிலைப்பள்ளி பிடிஏ தலைவர் என பல்வேறு பொறுப்புகளில்  இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் குருசாமி, மண்ணாடிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, மதிமுக மாவட்ட செயலாளர்கள் கணேசன், சேகர், கபினி சிதம்பரம், முருகன், நாகராஜ், ஆனந்தராஜ், மகேந்திரவர்மன் மற்றும் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள், அரிமா சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். 

Tags : Madhyamaka High Commission ,
× RELATED மாடுகள் வரத்து அதிகரிப்பு