சீர்காழி, பிப்.14: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேருந்து நிலையத்தில் உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு குறித்தும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டியும், விழிப்புணர்வு ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர், காயத்ரி, எஸ்பி தனிப்பிரிவு போலீசார் மணிகண்டன் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் நாகை ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி வைஸ்த்தீஸ்வரன் கோயில் பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.