திருச்செந்தூர், பிப்.12: திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடக்கிறது. திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும், காயல்பட்டினம் நகராட்சிகுட்பட்ட 18 வார்டுகளுக்கும் மற்றும் பேரூராட்சிக்குப்பட்ட பகுதிகளான கானம், ஆத்தூர், ஆறுமுகநேரி ஆகிய இடங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமானது, திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மைய த்தை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் குறித்தும், மேலும் வாக்கு எண்ணிக்கை கவுன்டர்களை அதிகப்படியாக விரிவு படுத்தினால் இப்பணி விரைந்து நடைபெறுவதற்கான ஆலோசனை வழங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதில் எஸ்பி ஜெயகுமார், ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், ஆர்டிஓ கோகிலா, தாசில்தார் சாமிநாதன், திருச்செந்தூர் நகராட்சி கமிஷனர் என்டி வேலவன் மற்றும் காயல்பட்டினம் கமிஷனர், கானம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பேரூராட்சி நிர்வாக அதிகரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
