×

தச்சநல்லூரில் மது விற்ற இருவர் கைது

நெல்லை, பிப். 12: நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி அறிவுறுத்தல்படி, எஸ்எஸ்ஐக்கள் வைரவன், தேவகுமார், மகாதேவன் ஆகியோர் தச்சநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்க முயன்ற, தச்சநல்லூர் மருத்துவர் தெருவை சேர்ந்த வேல்முருகன்(36), தச்சநல்லூர் கிருஷ்ணன் கோயில் வடக்கு தெருவை சேர்ந்த பேச்சிமுத்து(40) ஆகிய இருவரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Dachanallur ,
× RELATED தச்சநல்லூர் அருகே வயலில் மேய்ந்த ஆடுகள் திடீர் சாவு