×

கடமலைக்குண்டு அருகே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க மக்கள் கோரிக்கை

வருசநாடு, பிப். 11: கடமலைக்குண்டு அருகே மேகமலை ஊராட்சிக்குட்பட்ட சின்ன சுருளி அருவியில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சின்னச் சுருளி அருவியில் இருந்து வரக்கூடிய குடிநீர் பைப்புகள் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலைகளில் செல்கிறது. இதனால் தண்ணீர் வீணாவதுடன் சாலைகளும் சேதமடைந்து வருகிறது. மேலும், அருவிக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Katamalaikundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே மழைக்கு ஒழுகும் அரசு பள்ளி: மாணவ-மாணவிகள் அவதி