×

செட்டிபாளையம்-ஆண்டிபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் பணிமனை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார்

திருப்பூர், பிப்.12: திருப்பூர் மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள தேர்தல் பணிமனைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 58-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக காந்திமதி போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 58-வது வார்டுக்கு உட்பட்ட செட்டிபாளையத்தில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டது.

இதுபோல் 38-வது வார்டில் எம்.சாந்தாமணியும், 39-வது வார்டில் சாந்தியும் போட்டியிடுகிறார்கள். இதனால் ஆண்டிபாளையம் பகுதிகளில் தேர்தல் பணிமனையும் அமைக்கப்பட்டது. இந்த பணிமனைகளை தமிழக செய்தித்துறை அமைச்சரும், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் 41வது வார்டு வேட்பாளர் இல.பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Chettipalayam-Antipalayam ,Minister ,MB Saminathan ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...