×

ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் - வேளச்சேரி இணைப்பு சாலைக்கு பாலம் அமைப்பேன்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 165வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் நேற்று ஆதம்பாக்கம், புவனேஷ்வரி நகர், சரஸ்வதி நகர், ராகவன் நகர், ஆண்டாள் நகர், ரயில்வே காலனி, காஸ் குடோன் தெரு போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், ‘‘கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்தால், இந்த பகுதியில் சுகாதாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். சரஸ்வதி நகர் பெருங்குடி மண்டலத்தில் இருந்து தற்போது ஆலந்தூர் மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன். இப்பகுதி மக்்கள் வேளச்சேரி சாலைக்கு செல்ல பாலம் அமைத்து தருவேன். பாதாள சாக்கடை, கால்வாய் இணப்புகளை சீரமைத்து தருவேன்,’’ என்றார்.

ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ஆர்.பாபு, ஜி.ரமேஷ். லியோ பிரபாகரன், நாகராஜசோழன், சாரங்கன், வழக்கறிஞர் ஆனந்தகுமார், கிறிஸ்டோபர், சிவலிங்கம், வாட்டர் கண்ணன், சேது செந்தில், ராஜ்குமார், சரவணன், கார்த்திக், ஏழுமலை, கணேசன், பச்சையப்பன், ஆர்.பெருமாள், காங்கிரஸ் சார்பில் லயன் காமராஜ், பி.எஸ்.ராஜ், கே.ரவிக்குமார், கோவிந்தராஜ், எஸ்.வடிவேல், சுரேஷ், ராம், ஏழுமலை, எஸ்.ரமேஷ், ஜெய்கணேஷ், மதிமுக சார்பில் கராத்தே பாபு, ஜி.திருநா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Adambakkam Saraswathi Nagar ,Eeswara Prasad ,Nanjil ,
× RELATED முதல்வர் பதவிக்காக சசிகலாவை காட்டிக்...