×

ஜெயங்கொண்டம் பஸ்நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறிய பயணி திடீர் மரணம்


ஜெயங்கொண்டம், பிப்.11: ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்த பயணி திடீர் என மயங்கிய நிலையில் உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் திருச்சிக்கு புறப்பட இருந்த பேருந்தின் சீட்டில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை எழுப்பவே நகராமல் அப்படியே இருந்ததால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனை செய்ததில் முதியவர் இறந்தது தெரியவந்தது. உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து அவர் பையை சோதனை செய்ததில் விசிட்டிங் கார்டு இருந்தது. அதில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் மானம்புச்சாவடியை சேர்ந்த ரெகுராமன் சர்மா எனவும், ஜோதிடர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் நெசவாளர்களிடமிருந்து பட்டு நூல்களை சில்லறையில் வாங்கி செல்பவர் எனவும் தெரியவந்தது. இவர் கையில் எடுத்து வந்த பையில் சிறிதளவு பட்டுநூல், சிறிய தராசு ஒன்றும், மேலும் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணமும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறந்தவரின் உடலை கைப்பற்றி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Jayankondam ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...