×

141வது வார்டுக்கு தேர்தல் பணிமனை மயிலை த.வேலு எம்எல்ஏ திறந்து வைத்தார்

சென்னை: மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி 141வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து நேற்று காலை மேட்லி சாலையில் உள்ள மனமகிழ் மன்றத்தில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு பகுதி திமுக செயலாளருமான ஜெ.கருணாநிதி தலைமை தாங்கினார். மேற்கு பகுதி திமுக செயலாளர் கே.ஏழுமலை முன்னிலை வகித்தார்.

இதில் சென்னை தென் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு எம்எல்ஏ கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி பணிமனையை திறந்து வைத்து வேட்பாளர் ராஜா அன்பழகனை வெற்றிபெற வாழ்த்து கூறினார். இந்நிகழ்ச்சியில் கோ.உதயசூரியன், பி.மாரி, நானு ஜெயகுமார், வட்ட செயலாளர்கள் எஸ்.லட்சுமி காந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெ.ஜானகிராமன், பீடா கடை ரவி, கர்ணா, சக்திவேல், வழக்கறிஞர் ஜெயவேல், எஸ்.ராமலிங்கம், எல்.வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Mayila T. Velu ,MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...