×

தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்பிஎஸ் ராஜா சூசை நகரில் தீவிர வாக்கு சேகரிப்பு

ஸ்பிக்நகர், பிப். 10: தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்பிஎஸ்.ராஜா, சூசைநகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்பிஎஸ் ராஜா, வார்டு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வார்டுக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்கள், பெரியோரை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். சூசை நகர், தங்கம்மாள்புரம் பகுதிகளில் வாக்கு சேகரித்த எஸ்பிஎஸ்.ராஜா பேசியதாவது: சூசை நகர் தெருக்களில் மழைநீர் தேங்காத வகையில் தாழ்வான பகுதிகளை சமன்செய்து வடிகால் அமைக்கப்படும். சிறுவர் விளையாட்டு பூங்கா. தரமான சாலைகள். மின் விளக்குகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பிரசாரத்தில் தங்கம்மாள்புரம் ஊர் துணை தலைவர் பாலசேகர், முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி, பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன்,  சூசைநகர் அதிமுக நிர்வாகிகள் வடிவேல், அந்தோணிசாமி, சகாயம், கருப்பசாமி, மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Thoothukudi Corporation ,Ward ,AIADMK ,Raja ,Soosai ,
× RELATED மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த...