×

கல்வியில் சிறப்பாக பணியாற்றிய 6 அதிகாரிகளுக்கு தேசிய விருது காணொலி காட்சி மூலம் இன்று வழங்கப்படுகிறது துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் உள்பட

வேலூர், பிப்.10:திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் உள்பட 6 கல்வி அதிகாரிகளுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக தேசிய விருது இன்று வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் சார்பில் கல்வித்துறையில் கல்வி நிர்வாகம், திட்டமிடல் மற்றும் நடைமுறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.அந்த வகையில் கடந்த 2018-2019, 2019-2020ம் கல்வி ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரக்கல்வி அலுவலர் கோ.குணசேகரன், பள்ளிக்கல்வி ஆணையரக தொழிற்கல்வி இணை இயக்குனர் வெ.ஜெயக்குமார், மதுரை முதன்மை கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் ரா.மணிகிருஷ்ணன், விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா, நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டார கல்வி அலுவலர் ஆர்.கார்த்திக் ஆகியோர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு இன்று (10ம் தேதி) மாலை 3 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது. தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டாரக்கல்வி அலுவலர் கோ.குணசேகரனுக்கு சக அலுவலர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Regional Education Officer ,Trincomalee ,
× RELATED மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா