×

பர்கூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரி, பிப்.9: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்து பர்கூரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பர்கூரில் வரும் 19ம் தேதி பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு பர்கூரில் திருப்பத்தூர் கூட்ரோடு பகுதியில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணி வகுப்பை மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மெயின் ரோடு, டெக்ஸ்டைல் மார்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பர்கூர் காவல் நிலையம் எதிரில் அணிவகுப்பு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பின் போது, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து, ஜனநாயக கடமையாற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஏடிஎஸ்பி விவேகானந்தன், டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர்கள் பர்கூர் சவிதா, போச்சம்பள்ளி பிரபாவதி, பாரூர் ராஜேஷ் மற்றும் பர்கூர் காவல் சரத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்ஐக்கள் அமுதா, மகேந்திரன், சந்துரு, பச்சமுத்து, சிவக்குமார், ராஜாமணி, அனைத்து மகளிர் போலீஸ் எஸ்ஐக்கள் சாந்தி, சந்திரா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Tags : Bargur ,
× RELATED ஈரோடு மாவட்டம் பர்கூர்...