×

அய்யம்பேட்டையில் தங்கையுடன் பேசியவருக்கு கத்திகுத்து

தஞ்சை, பிப்.8: தஞ்சை மாவட்டம் மேல வழுத்தூர் பூக்கொல்லைத் தெருவை சேர்ந்தவர் ராமு (50). இவர் அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற கோபிநாத் என்பவரின் தங்கையுடன் பேசி உள்ளார். இதுகுறித்து கோபிநாத் என் தங்கையுடன் ஏன் பேசுகிறாய் என்று ராமுவிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமுவை வயிற்றில் குத்திவிட்டு கோபிநாத் தப்பியோடிவிட்டார். உடன் அக்கம் பக்கத்தினர் ராமுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கோபிநாத்தை கைது செய்தார். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Ayyampettai ,
× RELATED கும்பகோணம் அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு