திருப்பூர்: பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று முருகம்பாளையத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் பணிமனையை திறந்துவைத்து பேசினர். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், 41-வது வார்டு வேட்பாளருமான இல.பத்மநாபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.