திருவண்ணாமலை,பிப்.7: திருவண்ணாமலையில் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை நகரில் உள்ள வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தேவதைகள் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் இருந்த புனிதநீரை கோயில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச்சென்று வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் மூலவர் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். அதைத்ெதாடர்ந்து பரிவார தேவைகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், இரவு வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.