×

தச்சநல்லூர் உலகம்மன் கோயிலில் பிப்.8ல் திருமாலை பூஜை

நெல்லை, பிப். 3: தச்சநல்லூர் உலகம்மன் கோயிலில் வருகிற 8ம்தேதி திருமாலை பூஜை விழா நடக்கிறது. இதற்கான கால்நாட்டு வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.
வரும் 7ம்தேதி குடியழைப்பை முன்னிட்டு தச்சநல்லூர் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் இருந்து மாலை 6 மணிக்கு  குடியழைப்பு துவங்கி உலகம்மன் கோயிலை ெசன்றடைந்ததும் அம்மனுக்கு அபிஷேகத்தைத் தொடர்ந்து மாக்காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 8ம்தேதி காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலம் தச்சநல்லூர் தேவி, பூதேவி சமேத வரம்தரும் பெருமாள் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்ததும் பிற்பகல் 2 மணிக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அனைத்துத் தெருக்களிலும் வீட்டுவாசல் முன்பாக பொங்கலிடுதலும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. 9ம்தேதி காலை 8 மணிக்கு படப்பு பூஜை நடக்கிறது. விழாவில் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடனும் கொரோனா வழிகாட்டுதலுடன் பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேவி, கங்கைகொண்டான் ஆய்வாளர் முருகன் மற்றும் ஸ்ரீஉலகம்மன் பக்தசேவா குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Tirumala Puja ,Dachanallur Ulagamman Temple ,
× RELATED தச்சநல்லூர் உலகம்மன் கோயிலில் நாளை திருமாலை பூஜை விழா