×

கீழ்வேளூரில் ஆட்டோவில் மணல் கடத்திய 2 பேர் கைது

கீழவேளூர், பிப்.2: நாகை மாவட்டம கீழ்வேளூர் கச்சனம் சாலையில கீழ்வேளூர் ரயில்வேகேட் அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆற்று மணல் இருந்தது தெரியந்தது. போலீசார் விசாரணையில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்தவர் கீழ்வேளூர் வ.உ.சி.தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் திலகர் (36) என்பதும், தேவூர் குயவர் தெரு ராமகிருஷ்ணன் மகன் லட்சுமணன் (45)) என்பவர் வீட்டு கொல்லையில் இருந்து அனுமதியின்றி மணலை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து திலகர், லட்சுமணன் இருவரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Kizhvelur ,
× RELATED நாகை உழவர்சந்தை கீழ்வேளூரில் 100 நாள்...