×

முத்தையாபுரம் அருகே பைக் எரித்த தகராறில் 8 பேர் மீது வழக்கு

ஸ்பிக்நகர், ஜன.31: முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடு நேசமணி நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் முத்துப்பாண்டி(23). இவரது பைக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலர் எரித்தனர். இந்த பிரச்சனையை அந்த பகுதியில் உள்ள பெரியவர்கள் சமாதானம் பேசி முடித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த நேசமணி நகரைச் சேர்ந்த பார்வதி(50), சக்திவேல் மனைவி மாடத்தி(41) ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார், நேசமணி நகரைச் சேர்ந்த பார்வதி(50), வினிதா, முத்துப்பாண்டி(23), மாடத்தி, மகாராஜா, பிரேம்குமார், தங்கமணி, தங்கம் ஆகிய 8பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Muthiahpuram ,
× RELATED முத்தையாபுரம் அருகே கார் மோதி 2பேர் படுகாயம்