×

முத்தையாபுரம் அருகே கார் மோதி 2பேர் படுகாயம்

ஸ்பிக்நகர், ஜன.7: முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(57). தூத்துக்குடி நகராட்சி தெற்கு மண்டலத்தில் தூய்மை காவலராக பணியாற்றி வருகிறார். இவரும் உடன் வேலை பார்க்கும் தெய்வானை என்பவரும் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் பகுதியில் குவிந்திருந்த மணலை அகற்றிவிட்டு இருசக்கர வாகனத்தில் அலுவலகம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Muthiahpuram ,
× RELATED முத்தையாபுரத்தில் 29ம்தேதி மின்தடை