×

மாங்கொட்டாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்

ஏரல்,  ஜன. 28: மாங்கொட்டாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு ரூ.23.54 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.  சிவகளை அருக கீழ்பிடாகை கஸ்பா மாங்கொட்டாபுரம் பஞ்சாயத்துக்கு ரூ.23. 54 லட்சத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு  விழா விழா பஞ்சாயத்து தலைவர் அருண் பிரின்ஸ் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஊர்வசி அமிர்தராஜ்  எம்.எல்.ஏ., புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டி பணியைத்  துவக்கிவைத்தார். இதில் வைகுண்டம் பிடிஓக்கள் சுரேஷ், அன்றோ, உதவிப் பொறியாளர் பிரேம்சந்தர், பஞ்சாயத்து துணைத்  தலைவர் சுடலைகனி, உறுப்பினர்கள் சந்திரகலா, இசக்கி, கிராம கமிட்டி தலைவர்  பொன்வேங்கை, திமுக இலக்கிய அணி சண்முகராஜா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை,  வைகுண்டம் வட்டார தலைவர்கள் மேற்கு நல்லகண்ணு, வடக்கு சொரிமுத்து  பிரதாபன், மாங்கொட்டாபுரம் ஊர்ப் பிரமுகர்கள் முப்பிலிமாடன், ராமச்சந்திரன்,  விஜயகுமார், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Urvasi Amirtaraj ,MLA ,Mangottapuram Panchayat Office ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு