×

தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் மொழிப்போர் தியாகிகள் படத்துக்கு மலர்தூவி மரியாதை

தூத்துக்குடி, ஜன. 26: மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தியாகிகள் படத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர். தமிழ் மொழிக்காக போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் கோரம்பளத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில்  நடந்தது. மாணவரணி செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் சண்முகையா எம்எல்ஏ. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், அவைத்தலைவர் அருணாசலம், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், வழக்கறிஞரணி ஜெபராஜ், கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை ராமசாமி, இலக்கிய அணி ராஜபாண்டி, மீனவரணி ஸ்ரீதர்ரோட்ரிகோ, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, மாடசாமி, சுப்பிரமணியன், ராமசாமி, சுரேஷ்காந்தி, சிவகுமார், பொன்னரசு, ரவி, கொம்பையா, பார்த்திபன், ஜோசப், பாலமுருகன், பாலசிங், நவீன்குமார், நெசவாளரணி மகாவிஷ்ணு, துணை அமைப்பாளர் வெயில்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் சேசுபாலன், பகுதி இளைஞரணி செல்வக்குமார், நிர்வாகிகள் சுடலை, கல்யாணசுந்தரம், ராமஜெயம், மணிமுருகன், பார்த்திபன், ஆட்டோகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் அறிவுறுத்தலின்பேரில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட பிரதிநிதி கதிரேசன், மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர மருத்துவஅணி அருண்குமார், வர்த்தக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர்விஜயராஜ், கலை இலக்கிய அணி நலம்ராஜேந்திரன், மாநகர மாணவரணி பால்மாரி, தகவல்தொழில்நுட்ப அணி கண்ணன்,  போல்பேட்டை பகுதி செயலாளர் மேகநாதன், அண்ணா நகர் பகுதி துணை செயலாளர் பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் படத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, யூனியன் துணை தலைவர் பழனிசாமி, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் அம்பிகா வேலுமணி, இணை செயலாளர் நீலகண்டன், நகர பேரவை செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், நகர எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கணேசன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், பாசறை கணேசன், ஒன்றிய முன்னாள் செயலாளர் போடுசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெமினி என்ற அருணாசலம், கமலா ரவிச்சந்திரன், பத்மாவதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தியாகிகள் படங்களுக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதிகணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புராஜன், முத்துலட்சுமி அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மாவட்ட அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மாணவரணி செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார். இதில் அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட இணை செயலளார் செரினாபாக்கியராஜ், துணை செயலாளர்கள் சந்தனம், வசந்தாமணி, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வீரபாகு, இணை செயலாளர் வலசைவெயிலுமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், பாசறை செயலாளர் தனராஜ், விவசாய பிரிவு செயலாளர் சுதர்சன்ராஜா, பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், நட்டார்முத்து, இளைஞரணி திருச்சிற்றம்பலம், டைகர்சிவா, ஜோஸ்வாஅன்புபாலன், வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், சுகந்தன்ஆதித்தன், கோமதிமணிகன்டன், முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ், பொதுகுழு உறுப்பினர் மாரியப்பன், வட்ட செயலாளர் மனுவேல்ராஜ், நிர்வாகிகள் பூக்கடைவேலு, ரமேஷ்கிருஷ்ணன், பாஸ்கர், சாம்ராஜ், சகாயராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக மாணவரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு செயலாளர் பிரபாகரன் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரைட்டர், ஜெ. பேரவை இணை செயலாளர் விபிஆர்.சுரேஷ் ஆகியோர் மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மரியாதை செலுத்தினர். மகளிரணி சண்முககுமாரி, வர்த்தக அணி பாக்யசெல்வன், அவைத்தலைவர் தங்கமாரியப்பன், துணை செயலாளர் செல்வகுமார், பகுதி செயலாளர்கள் தாவீது, ஜான்பெர்னான்டோ, முத்துசெல்வம், வட்ட செயலாளர் காசிலிங்கம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். உடன்குடி பகுதிகளில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் படத்திற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் இளங்கோ, மாணவரணி செந்தில், அலாவூதின், மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் பூங்குமார், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் செல்வக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti ,Vilathikulam ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!