×

முத்தையாபுரத்தில் 29ம்தேதி மின்தடை


தூத்துக்குடி, ஜன.25: தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 29ம் தேதி நடக்கிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Muthiahpuram ,
× RELATED முத்தையாபுரம் அருகே கார் மோதி 2பேர் படுகாயம்