மேலூர், ஜன. 21: மேலூர் பஸ் டாண்ட் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு, நாட்டு விடுதலை போரில் பங்குபெற்ற வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி, பாரதியார் படம் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் மெய்யர் தலைமை வகித்தார். மாவட்ட குழுவை சேர்ந்த பெரியவர், திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் காளிதாஸ் சிறப்புரை ஆற்றினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.