×

கடமலைக்குண்டு ஊராட்சியில் கட்டியது முதல் பயன்பாடில்லா மண்புழு உரம் தயாரிப்பு கூடம்

வருசநாடு, ஜன. 21: கடமலைக்குண்டு ஊராட்சியில் பயன்பாடில்லா மண்புழு உரம் தயாரிப்பு கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள கரட்டுப்பட்டியில் இயற்கை முறையில் உரம் தயாரிப்பதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 2017-18ம் நிதியாண்டில் மண்புழு உரம் தயாரிப்பு கூடம் கட்டப்பட்டது. கட்டிய நாள் முதல் பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால், அரசு நிதி வீணாகிறது. விவசாயிகளுக்கு தேவைக்கு இயற்கை உரமும் பெற முடியவில்லை. எனவே, மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தை கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சீரமைத்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சிகளிலும் இதே நிலைதான் நீடிப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே, ஊராட்சி தோறும் மண்புழு உரம் தயாரிப்பு கூடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Katamalaikundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே ஒதுங்கினால்...