×

முத்துப்பேட்டை அருகே விவசாயிகள் சாலை மறியல்

முத்துப்பேட்டை,ஜன.12: முத்துப்பேட்டை அருகே உள்ள தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை மேலக்காடு கிராமத்தில் நீண்ட நாட்களாக அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மின் கட்டணம் செலுத்தாததால் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள மின் இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளதால் இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் திறக்க வில்லை. இதனால் இப்பகுதியில் சாகுபடி செய்து அறுவடை செய்த தங்களது நெல்களை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் போடமுடியாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வந்தது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி விவசாயி ராஜா தலைமையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்களுடன் தங்களது மாட்டு வண்டிகளை தஞ்சை - திருவாரூர; மாவட்ட எல்லை தம்பிக்கோட்டை முக்கூடு சாலையில் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முற்றிலும் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி வௌ்ளத்துரை, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் தலைமையில் போலீசார் பட்டுக்கோட்டை தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சமாதானம் அடைந்து சாலை மறியலை விலக்கி கொண்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 2மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Muthupet ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்