×

தச்சநல்லூரில் ஊர்காவல் படை வீரர் தற்கொலை நண்பர் மீது வழக்கு

நெல்லை, ஜன. 11: தச்சநல்லூர் உலகம்மன் கோயில் தெருவை சேர்ந்த பேச்சியப்பன் மகன் அர்ஜூனன் (35), ராமையன்பட்டியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், நெல்லை மாநகர ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். அர்ஜூனனுக்கும், உறவினரான மகேஸ்வரிக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஓராண்டிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அர்ஜூனை பிரிந்து மகேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கடந்த 2019ல் விஜயலட்சுமி என்பவரை அர்ஜூனன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவரும் கருத்து வேறுபாட்டால் 6 மாதத்திலேயே அர்ஜூனனை பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் அர்ஜூனனுடன் வேலை பார்த்து வரும் நண்பரான வைகுண்டத்தை சேர்ந்த மாரியப்பன்,  கடந்த 2 நாட்களுக்கு முன்பு அர்ஜூனனை கிண்டல், கேலி செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். தகவலறிந்த தச்சநல்லூர் போலீசார், அர்ஜூனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் அர்ஜூனனின் உறவினர்கள் அளித்த புகார் மனுவில், வைகுண்டத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர், இரு மனைவிகள் பிரிந்து சென்றது தொடர்பாக அர்ஜூனனை கிண்டல், கேலி செய்த காரணத்தால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அர்ஜூனனை தற்கொலைக்கு தூண்டியதாக மாரியப்பன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : Kayts ,Tachanallur ,
× RELATED தச்சநல்லூர் குருநாதன் கோயில்...