விளாத்திகுளம், ஜன. 9: விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த இம்முகாமுக்கு தாசில்தார் விமலா தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வத்துடன் பங்கேற்ற நிலையில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த ஹரிணி என்ற திருநங்கைக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை தாசில்தார் விமலா வழங்கிப் பேசினார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சுயஉதவிக் குழு துவங்க வேண்டும். நலவாரிய அட்டை கிடைப்பதை எளிதாக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது இதுதொடர்பாக பரிசீலிப்பதாக அதிகாரிகள் முகாமில் தெரிவித்தனர். மேலும் இதுவரை விளாத்திகுளம் தாலுகாவில் மொத்தம் 13 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினர். முகாமில் குடிமைப்பொருள் வட்ட பொறியாளர் கணேஷ் குமார், புஷ்பராஜ், அழகுமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.