×

கந்தர்வகோட்டையில் பைக் விபத்தில் 3 பேர் காயம்

கந்தர்வகோட்டை, ஜன.9: கந்தர்வகோட்டையில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பகுடியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பாலகிருஷ்ணன் (34) என்பவர் கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பகுடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஆதனக்கோட்டையை சேர்ந்த கலியபெருமாள் மகன்கள் சிங்கமுத்து மற்றும் மாணிக்கம் இருவரும் அவர்களுக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் கறம்பக்குடியில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது நெப்புகை கிராமம் அருகே இருவரும் நேருக்குநேர் மோதியதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு கறம்பகுடி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


Tags : Kandarwakottai ,
× RELATED பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று...