×

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

திருப்பூர்: மதுரை  மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவபாண்டியன் (எ) திலீப் (23).  இவர் திருப்பூர் காங்கயம் பகுதியில் தங்கி கூலிவேலை செய்து வந்துள்ளார்.  இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி  அழைத்து சென்று திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை  அறிந்த சிறுமியின் தாய் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து  சிவபாண்டியனை தேடி வந்தனர். நேற்று சிவபாண்டியன் மதுரையில்  பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து  காங்கயம் போலீசார் மதுரையில் பதுங்கியிருந்த சிவபாண்டியன் (எ) திலீப்பை  போக்சோவில் கைது செய்தனர்.

Tags : Pokcho ,
× RELATED விழுப்புரம் அருகே மாணவியை கூட்டு...