தஞ்சை, ஜன.6: தஞ்சை அருகே அம்மாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 15-18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அம்மாப்பேட்டை சின்னக்கடை தெரு காந்திஜி சாலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமையில் 10ம் வகுப்பு மாணவர்கள் 29 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இப்பணியில் அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர் பிரதீஷ், செவிலியர் தமிழரசி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ஈடுபட்டனர். முகாமில் ஆசிரியர்கள் தமிழ்செல்வன், செந்தில்குமார், தமிழ்ச்செல்வி, ஜோசப் ஆசிர்வாதம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.