×

வாலிபர் பலி

தேவாரம், ஜன. 3: தேவாரத்தில் டூவீலரிலிருந்து தவறி விழுந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேவாரத்தில் உள்ள நாடார் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் ரவிக்குமார் (21). இவர், கடந்த 30ம் தேதி டூவீலரில் கால்நடை தீவனங்கள் வாங்கச் சென்றார். அப்போது நகரில் உள்ள பால்வாடி அருகே, சாக்கடையை கடக்க முயன்றார். இதில், திடீரென டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த ரவிக்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில், தேவாரம் எஸ்.ஐ.ஜெகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Valipar ,
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!