×

மருத்துவ காப்பீடு திட்டம் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அனுமதிக்க வேண்டும்

கரூர், ஜன. 3: மருத்துவகாப்பீடு திட்டம் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என கரூரில் நடந்த ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், பொருளாளர் சதாசிவம் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சி நிதிக்கணக்கில் ஒய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒய்வூதிய பதிவேட்டில் நாளது வரை பதிவுகள் மேற்கொள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். குடும்ப ஒய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க மாதாந்திர சந்தா பிடித்தம் செய்து கொண்டு, ஒய்வூதியர்களைப் போலவே ரூ. 50ஆயிரம் அனுமதிக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைத்து ஒய்வூதியர்களுக்கும், குடும்ப ஒய்வூதியர்களுக்கும் நிபந்தனையின்றி அனைத்து நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அதற்கான தொகை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...