×

வண்டிப்பெரியாரில் சிறுமி பலாத்காரம் அசாம் தொழிலாளி ைகது

மூணாறு: வண்டிப் பெரியாரில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை ேசர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். வண்டிப்பெரியாரை சேர்ந்த 13 சிறுமியை காணவில்லையென அவரது பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதே நேரத்தில் அப்பகுதியில் வேலை செய்த அம்சர் அலி(22) என்ற அசாம் மாநில தொழிலாளியும் காணவில்லையென தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போனை போலீசார் டிராக் செய்த போது, அவர் கோட்டயம், பாலக்காடு வழியாக தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து வண்டிப்பெரியார் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார், பாலக்காட்டில் அம்சர் அலியிடமிருந்து சிறுமியை மீட்டனர். விசாரணையில், சிறுமியை பலமுறை அம்சர்அலி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அம்சர் அலி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார்.

Tags : Assam ,Vandiperiyar ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...