×

கந்தர்வகோட்டை பகுதியில் கலர் கோழி குஞ்சுகள் விற்பனை விறுவிறுப்பு


கந்தர்வகோட்டை, டிச. 31: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவ விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்து படித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சி பகுதிகளிலிருந்து கலர்கலராய் கோழிக்குஞ்சுகளை டூவீலரில் கொண்டு வந்து இந்தப் பகுதிகளில் விற்பனை செய்து கொண்டு வருகிறார்கள். இதனை கண்ட பள்ளி குழந்தைகள் ஆசையுடன் விலைக்கு வாங்கி செல்கிறார்கள். மேலும் அவர்கள் அணிந்துள்ள ஆடைகளுக்கு ஏற்ற கலர்களில் கோழி குஞ்சுகளை வாங்கி செல்வது வியப்பாக உள்ளது.

Tags : Kandarwakottai ,
× RELATED பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று...