கறம்பக்குடி, டிச,28: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்ய சீனிக்கடை முக்கம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக, கறம்பக்குடி காவல் துறைக்கு வந்தது. இந்த தகவலை அடுத்து காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 212 மது பான பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.28,340 ஆகும்.