×

கட்டபெட்டு பகுதியில் ஆடு திருடிய 3 பேர் கைது

கோத்தகிரி, டிச.25: கோத்தகிரி கட்டபெட்டு பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் நீலகண்டன். இவருக்கு சொந்தமாக 13 ஆடுகளை வழக்கம் போல் கட்டபெட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது குடிபோதையில் பைக்கில் வந்த 3 வாலிபர்கள் சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நீலகண்டன் தனது உறவினர் ஒருவருடன் ஆட்டை தேடிக்கொண்டு ஒரசோலை வரும் வழியில் வந்துள்ளனர். அடவளை தனியார் ஓட்டல் அருகே காணாமல் போன ஆட்டை வைத்துக்கொண்டு இருந்த 3 பேரையும் விசாரித்துள்ளனர். இவர்கள் மூவரும் முன்னுக்கு பின்னாக முரணான பதில் கூறியுள்ளனர்.

உடனே நீலகண்டன் கோத்தகிரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரிடம் விசாரித்து நடத்தினர். அதில் ஒரசோலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பால்பாண்டி (42), ராதாகிருஷ்ணன் (29), மணிகண்டன் (34) ஆகியோர் என்பதும், அது நீலகண்டனுக்கு சொந்தமான ஆடு என்பதும் தெரியவந்தது.பின்னர் அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது குன்னூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kattabettu ,
× RELATED ஜெகதளா, கோத்தகிரி, கட்டபெட்டு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்