×

அடுத்தவர்களுக்கு உதவி செய்து கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்

நெல்லை, டிச. 25: தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி: மிகவும் சிக்கல் நிறைந்த காலக்கட்டம் இது. கொரோனா என்கிற கொடிய தொற்று நோயிடம் சிக்கி, ஒட்டுமொத்த உலகமே தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அன்பும், மனிதநேயமும், சகோதரத்துவமும் கதிரவனின் சுடரொளிப்போல் எங்கும் பரவட்டும்.

‘பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார் இயேசு பெருமகனார். அவர் சொன்ன அந்த வழியில், நாம் எவற்றை மகிழ்ச்சி என்று கருதுகிறோமோ, நாம் எவற்றை சந்தோஷம் என்று எண்ணிப் பெருமை கொள்கிறோமோ, அவை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்வோம். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி, அந்த சந்தோஷத்தில் நாம் ஆனந்தம் காண்போம்.

கொரோனா என்ற இருள் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில், ஏழை, எளியோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம். சமூக இடைவெளியை கடைபிடித்து, எளிமையாகக் கொண்டாடினாலும், நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும் ஏற்றம் தரும் திருநாளாக இந்த கிறிஸ்துமஸ் தினம் அமையட்டும். எல்லா மக்களும் எல்லா வளமும், நலமும் பெற்று, நோய் நொடியின்றி வாழ, எல்லாம் வல்ல இறைவனை இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு ரூபி மனோகரன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

Tags : Christmas ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...