×

தளவாய்புரத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்

ராஜபாளையம், டிச. 24: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தூய்மை பாரத இயக்கம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், 75வது சுதந்திர கொண்டாட்டம், பணமில்லா பரிவர்த்தனை, மண் வள அட்டை மற்றும் கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் சிலம்பாட்டம்,தப்பாட்டத்துடன் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவித்திட்ட இயக்குனர் கணபதி ஆகியோர் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பாலிதீன் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்த வலியுறுத்தி அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டதோடு முகக்கவசம் மற்றும் சோப் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர் வேல்முருகன் செய்திருந்தார்.

Tags : Central Government ,Talawaipuram ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...