×

கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பொள்ளாச்சி வழியாக ரயில்கள் இயக்க வேண்டும்

கோவை, டிச. 23:  ரயில்வே ஓய்வூதியர்கள் நல சங்கம் சார்பாக  ஆலோசனை கூட்டம் கோவை போத்தனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு இச்சங்கத்தின் பொருளாளர் பழனிசாமி தலைமை தாங்கினார்.ரயில்வே  ஓய்வூதியர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற  இக்கூட்டத்தில் தென் மாவட்டங்களுக்கு கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக அதிக ரயில்கள் இயக்க வேண்டும் எனவும், ஜனவரி 1-1-2020 முதல் 30-06-2020 வரையில் நிலுவையிலுள்ள உள்ள  அரியர்சை உடனே வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், இச்சங்கத்தின் பொருளாளர் மணிலால் காந்தி,  நிர்வாகி ஜானகிராமன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Coimbatore ,Thenmavattam ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...