×

வைகை ஆற்றில் மாஜி ராணுவ வீரர் சடலம் மீட்பு

பரமக்குடி,டிச.22:  பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூர் வைகை ஆற்றில் முன்னாள் ராணுவ வீரர் சடலமாக மீட்கப்பட்டார். பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூர் படுகை அணையில் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தர்மேந்திரன்(42) என்பது தெரியவந்தது. இவர், குடும்பத்துடன் பரமக்குடி வசந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே தெளிச்சத்தநல்லூர் வைகை அணை பகுதியில் தீயணைப்பு வீரர்கள், தர்மேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைகையாற்றில் குளிப்பதற்காக வந்தவர் சகதியில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமான என்பது குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பரமக்குடி வைகை ஆற்றில் கடந்த 3 தினங்களில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vaigai River ,
× RELATED மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினார் வீரஅழகர்