×

பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாதலமான ரஞ்சன்குடிகோட்டை கட்டிடத்தில் மண்சரிவு

பெரம்பலூர், டிச.22: பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்தலமான ரஞ்சன்குடி கோட்டை கொத்தளம் அண்மையில் பெய்த கன மழைக்கு சரிந்தது. இதனை பார்வையிட்டு விரைந்து சீரமைக்க எம்எல்ஏ பிரபாகரன் பரிந்துரை செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்று லாத்தலம் ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோமீட்டர் தூரத்தில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் அமைந்துள்ள இந்தக்கோட்டை, கிபி 16ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. ஒரு குன்றை சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் கோட்டைக்கான கட்டுமானப்பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானை மறவன் என்றக் குறுநில மன்னரால் தொடங்கப்பட்டது. ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடிகோட்டை, துருவத்துக் கோட்டை என பல பெயர்களில் இந்தக்கோட்டை அழைக்கப்படுகிறது.

சந்தா சாஹிப்- பிரெஞ்சு கூட்டுப் படைக்கும், முகமது அலி-ஆங்கிலேய கூட்டுப் படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டா போர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்த தாக வரலாற்று ஆதா ரங்கள் கூறுகின்றன. இன்றளவும் இக்கோட்டையைச் சுற்றி அகழிகள், கோட்டைக்கு உள்ளே விதான மண்டபம், பீரங்கிமேடை, கொடி மேடை, தண்டனைக் கிணறு, வெடிமருந்துக் கிடங்கு, புறவழிச் சுரங்கப்பாதை, பிற்கால பாண்டியர் ஆட்சியில், முகமதியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மண்டபங்கள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்காதபடி இருப்பதற்கோ, துப்பாக்கிகளால் குறிபார்க்கவோ துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர்கள், குதிரைலாயம் ஆகியன சாட்சிகளாக உள்ளன. தற்போது தொல்லியல் துறையின் சென்னை மண்டல கட்டுப் பாட்டில் இருந்து வருகிறது.

நிலநடுக்கத்தால் கூட பாதிப்படையாத இந்தக் கோட்டையின் கொத்தளம் தற்போது பெய்த கனமழைக்கு சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர், டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக ரஞ்சன்குடிக் கோட்டையின் கண்காணிப்பு கோபுரமாக விளங்கும் கொத்தளத்தின் பக்கச் சுவர் 3 மீட்டர்அகலம், 2 மீட்டர் உயரத்திற்கு சரிந்து விட்டது. இதனை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வுசெய்து சீரமை ப்புப் பணிகளை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளார்.

Tags : Landslide ,Ranjankudikottai ,Perambalur district ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...