×

சூதாடிய 11 பேர் கைது 15,900 பறிமுதல்

கிருஷ்ணகிரி, டிச.21: கெலமங்கலம் போலீசார் விருப்பாச்சி நகர் இருளர் காலனியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சூதாடி கொண்டிருந்த பெத்தகானப்பள்ளியை சேர்ந்த ராஜாமணி (33), கணேஷ் காலனி பிரகாஷ்(43), ரங்கநாதன்(38), சந்திரசேகர்(32), அண்ணாநகர் மஞ்சுநாத், குப்புராஜ்(58) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ₹10,700ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் தொட்டிகானப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் சூதாடிக்கொண்டிருந்த நேதாஜி நகரை சேர்ந்த வெங்கடேஷ்(24), கள்ளக்குறுக்கி சந்திரப்பா(36), கெலமங்கலம் மணி(31), தொட்டிகானப்பள்ளி சதீஷ் (23), அபிமன்யு(42) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED கடும் வெயிலால் வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள்