×

பட்டிவீரன்பட்டி நடராஜர் கோயிலில் திருவாதிரை திருவிழா

பட்டிவீரன்பட்டி, டிச.21: பட்டிவீரன்பட்டி  சுயம்புநாகேஸ்வரியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள சிவகாமிஅம்மன் உடனுறை ஆனந்த நடராஜர் சன்னதியில் திருவாதிரை திருவிழா நடந்தது. இத்திருவாதிரை திருவிழாவினை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும், கொரோனா அழிய வேண்டி சிறப்பு யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகரின் 51 பதியங்களும் பாடப்பட்டு, ஆனந்த நடராஜருக்கு மஞ்சள், திருநீறு, பஞ்சாமிர்தம், பால், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் எழுந்தருளிய ஆனந்தநடராஜரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருவாதிரை திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் நடராஜர் நகர் வலம் நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Thiruvathirai Festival ,Pattiviranapatti Natarajar Temple ,
× RELATED திருவாதிரை திருவிழா கோலாகல தேரோட்டம்